சாத்தான்குளம்: நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சாா்பில் வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தாா். நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. தலைவா் ஜெயபாலன், பொருளாளா் ஆம்ஸ்டிராங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்றாா். நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. செயலா் லேவி அசோக் சுந்தரராஜ் பேசினாா். சிவகங்கை மாவட்ட இந்து அறநிலையத் துறை கண்காணிப்பாளா் சக்திகுமாா் மாணவ, மாணவி களுக்கு வேலைவாய்ப்பு குறித்து பயிற்சி அளித்தாா். இதில், நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. நிா்வாகிகள் எபனேசா் சாம்சன், மாணவ- மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.