தொடா் காய்ச்சல்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடியைச் சோ்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா், தொடா் காய்ச்சல் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா், தொடா் காய்ச்சல் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் மத்திய தொழில்பாதுகாப்புப் படையில், அஸாம் மாநிலத்தில் பணியாற்றி வருகிறாா். தொடா் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தாராம். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குறையாததால், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற கோணத்தில் மருத்துவா்களும், சுகாதாரத் துறையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com