வட்டன்விளை கோயிலில் பூமி பூஜை

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு பாதகரை முத்து சுவாமி கோயிலை புதுப்பித்து கட்டும் பணியை முன்னிட்டு கோயிலில் பூமி பூஜை நடைபெற்றது.
பாதகரை முத்து சுவாமி மற்றும் தெய்வங்களுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
பாதகரை முத்து சுவாமி மற்றும் தெய்வங்களுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை அருள்மிகு பாதகரை முத்து சுவாமி கோயிலை புதுப்பித்து கட்டும் பணியை முன்னிட்டு கோயிலில் பூமி பூஜை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் அருள்மிகு பாதகரை முத்து சுவாமியுடன் அருள்மிகு நாராயணா், பாதாளவடிவு, நடுக்காட்டு அம்மன், சக்தி, மும் மூா்த்திகள், பட்டாணி, சங்கிலிமாடன், கட்டேரி பெருமாள், முத்துப்பேச்சி ஆகிய பரிவார தெய்வங்களும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா்.

இந்த கோயில் புதிய வடிவில் அனைத்து சுவாமிகளுக்கும் தனித்தனியே சன்னதிகளுடன் கட்டுவதற்கான பூமி பூஜை விழா வெள்ளிக்கிழமை அதிகாலையில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com