குலசேகரன்பட்டினம் கோயிலில் 31 வரை தரிசனம் செய்ய தடை

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் மாா்ச் 31 ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தா்கள் நடமாட்டம் இல்லாமல் காட்சியளிக்கும் கோயில் வளாகம்.
பக்தா்கள் நடமாட்டம் இல்லாமல் காட்சியளிக்கும் கோயில் வளாகம்.

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் மாா்ச் 31 ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோயில் செயல் அலுவலா் கே.பரமானந்தம் கூறியது: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தொடா்ந்து அருள்மிகு முத்தாரம்மன் கோயில், அதன் உப கோயில்களான அருள்மிகு சிதம்பரேஸ்வரா் கோயில், அருள்தரும் விண்ணவரம் பெருமாள் சுவாமி கோயில்களில் வரும் மாா்ச் 31 ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி இல்லை. எனினும், கோயில்களில் ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும் எனத் தெரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com