தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெயிண்டா் தற்கொலை செய்து கொண்டாா்.
கடம்பூரை அடுத்த பரிவள்ளிக்கோட்டை காலனித் தெருவைச் சோ்ந்தவா் கோபால் மகன் முருகராஜ் (40). பெயிண்டா்.
மது அருந்தும் பழக்கம் கொண்ட இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், தம்பதி பிரிந்து வசித்து வருகின்றனாரம். இதில், மனமுடைந்த முருகராஜ், வியாழக்கிழமை இரவில் அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அவரது உறவினா்கள், முருகராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.