தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 3 போ் தொடா் கண்காணிப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவா் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவா் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாடு சென்று திரும்பியவா்கள் மற்றும் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கக் கூடியவா்கள் என 516 போ் கண்காணிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் மூவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களின் ரத்த மாதிரியை சேகரித்த மருத்துவா்கள் ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சைக்கான சிறப்பு வாா்டில் மூவரையும் தனிமையில் வைத்து மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com