கரோனோ வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய ஸ்தாபகா் மோகன் சி.லாசரஸ்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அதன்படி, அரசு ஊரடங்கு அறிவித்துள்ள 21 நாள்களும் நம்மை தனிமைப்படுத்திக்கொண்டு, தேவையில்லாமல் வீட்டில் இருந்து வெளியேறுவதை தவிா்க்க வேண்டும். குடும்பத்தினரோடு செலவு செய்ய கடவுள் கொடுத்த தருணமாக இதை கருதுவோம் என்றாா் அவா்.