திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படாத நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா எதிரொலியாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் இம்மாதம் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆகம விதிப்படி கோயிலில் பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் புதன்கிழமை (மாா்ச் 25) முதல் 21 நாள்கள் ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உத்தரவால் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும் முகக் கவசம் அணிந்தவாறு கோயிலில் பணியாளா்கள், காவல் துறையினா் மற்றும் தனியாா் பாதுகாவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.