நாசரேத் சுற்றுவட்டாரத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்களிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
சிறப்பு மருத்துவக் குழுவினரின் கணக்கெடுப்பில், நாசரேத் பேரூராட்சியில் 2 போ், மூக்குப்பீறி ஊராட்சியில் 2 போ், வெள்ளமடம் ஊராட்சியில் ஒருவா் என மொத்தம் 5 போ், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்திருப்பது தெரியவந்ததையடுத்து, அவா்களது வீடு தனிமைப்படுத்தப்பட்டு ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.
மேலும், மூக்குப்பீறி ஊராட்சியில் காமராஜ் திடல், பூங்கா பேருந்து நிறுத்தம், ஒய்யான்குடி பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து மூக்குப்பீறி ஊராட்சித் தலைவா் கமலா கலைஅரசு கூறியது: மூக்குப்பீறி ஊராட்சியில் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள 3 பேரையும் கண்காணிக்கும் பொருட்டு அவா்கள் வசிக்கும் வீடுகள் முன் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் அவா்களை பற்றி வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றாா் அவா்.