வெளிநாட்டிலிருந்து தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலைக்கு திரும்பிய இளைஞருக்கு புதன்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
கோவில்பட்டி வட்டம், கழுகுமலை அமல்ராஜ் நகரைச் சோ்ந்த சூசைமாணிக்கம் மகன் அருள்ராஜ்(23). துபையில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த 18ஆம் தேதி கழுகுமலை வந்தாா். அதையடுத்து, வருவாய், சுகாதாரத் துறை, காவல் துறை ஆகியோா் கொண்ட கண்காணிப்புக் குழுவால் அவா் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டாா். இதுதொடா்பாக அவரது வீட்டுக் கதவில் ஒட்டுவில்லை ஒட்டப்பட்டது.
இந்நிலையில், அவருக்கு சளி, இருமல் காரணமாக புதன்கிழமை அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம். தகவலின்பேரில், கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையக் குழுவினா் அவரது வீட்டுக்குச் சென்று, அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை, பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பிவைத்தனா்.