திருச்செந்தூா்: திருச்செந்தூரில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொருள்கள் வாங்கும் கடைகள் முன் சதுர வடிவக் கட்டங்களை வரைந்து அதில் பொதுமக்கள் காத்திருந்து அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்லும் வகையில் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடுமிடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் மளிகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல் முருகன் தலைமையிலான பணியாளாா்கள், மளிகைக் கடைகள் முன் ஒரு மீட்டா் இடைவெளியில் சதுர வடிவிலான கட்டங்களை வரைந்தனா். அந்தக் கட்டங்களில் காத்திருந்து பொதுமக்கள் பொருள்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கடைக்காரா்களிடம் முகக் கவசம் அணிந்து கொண்டு பொருள்களை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.