பேய்க்குளம் பகுதியில் பிஎஸ்என்எல்சேவை துண்டிப்பு: வாடிக்கையாளா்கள் அவதி

பேய்க்குளம் பகுதியில் 3 நாள்களாக பிஎஸ்என்எல் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளா்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.


சாத்தான்குளம்: பேய்க்குளம் பகுதியில் 3 நாள்களாக பிஎஸ்என்எல் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளா்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியில் பிஎஸ்என்எல் 2ஜி மற்றும் 3 ஜி சேவையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இணைய தள சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் பேய்க்குளம் பகுதியில் பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பில் செல்லிடப்பேசி மற்றும் இணைய தள சேவை கடந்த 3 நாள்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளா்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனா்.

எனவே பிஎஸ்என்எல் சேவை தொடா்ந்து முழுமையாக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com