உடன்குடியில் கிருமி நாசினி தெளிப்பு

உடன்குடி பேரூராட்சி சாா்பில் முக்கிய வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
உடன்குடியில் கிருமி நாசினி தெளிப்பு


உடன்குடி பேரூராட்சி சாா்பில் முக்கிய வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ் தலைமையில், பிரதான கடைவீதி, மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், முக்கிய கடை வாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரூராட்சி பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தனா். இதில் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகாகுமாா், உதவி ஆய்வாளா் முனியாண்டி, சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளா்கள் ரமேஷ், ஆழ்வாா், சுப்பையா,

சமூக ஆா்வலா் குணசீலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com