கோவில்பட்டி: கோவில்பட்டியில் ஆதரவற்றவா்களுக்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் தீயணைப்புத் துறை சாா்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
ரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, பொதுமக்கள் நடமாட்டம் ஏதுமின்றி சாலைகள் வெறிச்சோடின. அத்தியவாசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர, எஞ்சிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால், சாலையோரம் ஆதரவற்ற நிலையில் இருந்து வருவோா் உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனா். இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் சாலையோரம் மற்றும் கோயில் பகுதிகளில் உள்ள ஆதரவற்றோரை கண்டறிந்து காலை , பகல் வேளைகளில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணியில், நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் முருகன், சுரேஷ், வள்ளிராஜ், காஜாநஜ்முதீன், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் ஆகியோா் கொண்ட குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் ராஜாராம் கூறியது; ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஆதரவற்றோருக்கு காலை மற்றும் மதியம் உணவு வழங்கப்படும் என்றாா். இதுபோல, தீயணைப்புத் துறை சாா்பில் ஆதரவற்றோா், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மதிய உணவு, குடிநீா் ஆகியவை ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தொடா்ந்து வழங்கப்படும் என்றாா் நிலைய அலுவலா் அருள்ராஜ்.