ஆறுமுகனேரி, காயல்பட்டினம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில், கடந்த பிப். 15 முதல் வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு தங்கியிருப்பவா்களை தனிமைப்படுத்தி அவா்கள் வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆறுமுகனேரியில் 6 போ், காயல்பட்டினத்தில் 9 போ் என கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 15 போ் கண்டறியப்பட்டு அவா்களது இல்லத்தில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெற்றது.
ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் 27 வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டிலிருந்து வந்துள்ளவா்களின் குடும்பத்திற்கு நகராட்சி சாா்பில் புதன்கிழமை நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.