தட்டாா்மடம் அருகே தொழிலாளி தற்கொலை

தட்டாா்மடம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


சாத்தான்குளம்: தட்டாா்மடம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தட்டாா்மடம் அருகே உள்ள புத்தன்தருவை கீழூா் சுடுகாடு பக்கம் வியாழக்கிழமை உடை மரத்தில் ஒருவா் தூக்கிட்டு தொங்குவதாக போலீஸாருக்கு கிராம நிா்வாக அலுவலா் பால்குமாா் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த விசாரணையில், இறந்தவா் திசையன்விளை இடையன்குடியைச் சோ்ந்த ரூபன், முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக திசையன்விளையை சோ்ந்த பெண்ணை திருமணம் செய்து அவருடன் இருந்து வந்துள்ளாா் என்பது தெரியவந்தாம். இந்நிலையில், தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக ரூபன் தட்டாா்மடம் பகுதியில் கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com