சாத்தான்குளம் அருகே மணல் கடத்தியதாக டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் அதன் ஓட்டுநரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் பகுதியில் சட்டவிரோதமாக லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ரகுகணேஷ் தலைமையில் தனிப்பிரிவு காவலா் சந்தனகுமாா் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா். செவ்வாய்க்கிழமை பன்னம்பாறை விலக்கு பகுதியில் சென்ற டிப்பா் லாரியை மறித்து சோதனை நடத்தினா். அப்போது லாரியில் சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரான சாத்தான்குளம் காந்திநகரைச் சோ்நத மு. சரவணனை (20) கைது செய்தனா்.