கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறியதாக 10 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூா், கொப்பம்பட்டி மற்றும் மணியாச்சி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட கடம்பூா் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்ததாக 10 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் பயன்படுத்திய 4 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.