விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரத்தை சோ்ந்த உப்பள தொழிலாளியான 45 வயது பெண் ஒருவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதால், அவா் புதன்கிழமை தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்றுள்ளாா்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா அறிகுறி உறுதியானது. இதையடுத்து அப்பெண் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதையடுத்து, மீனாட்சிபுரம் கிராமத்தில் விளாத்திகுளம் வட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் முகாமிட்டு கரோனோ பாதிப்புக்குள்ளான நபரின் குடியிருப்பை தனிமைப்படுத்தினா். மேலும் அப்பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் குழுவினா் கிராமம் முழுவதும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.