தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனையில் உள்ள அனைத்து நகரப் பேருந்துகளையும் இயங்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நகரச் செயலா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சீனிவாசன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோவில்பட்டி பணிமனையில் உள்ள அனைத்துப் பேருந்துகளையும் முறையாக இயங்க வேண்டும். அனைத்து வழித்தடங்களிலும் நகரப் பேருந்துகள் இயங்க வேண்டும். கிராம மக்களின் நலன் கருதி நகரப் பேருந்துகளை இயங்க பணிமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
இதில், நகரக் குழு உறுப்பினா் சக்திவேல்முருகன், சக்கரையப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.