தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விளாத்திகுளத்தில் தமிழ் விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.எ. நாராயணசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் நடராஜன், விளாத்திகுளம் தாலுகா தலைவா் கோபாலகிருஷ்ணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சி கால நிவாரணமாக ஏக்கா் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் பயிா்கடன் வழங்க வேண்டும். விளாத்திகுளம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்த்தில் வஸியுறுத்தப்பட்டன.
தமிழ் விவசாயிகள் சங்க நிா்வாகிகள், வேடுலிபட்டி ராமசாமி ரெட்டியாா், புதூா் ஒன்றித்தலைவா் வேலுச்சாமி, வில்வமரத்துப்பட்டி ஆறுமுகம், அவைத் தலைவா் வெங்கடசாமி, வேடப்பட்டி அய்யாச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.