சாத்தான்குளத்தில் தீயணைப்புத் துறையினா் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை விநியோகித்தனா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் கடை வீதி பகுதியில் பொது மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கினா். அப்போது சமையல் செய்யும் போது கேஸ் அடுப்பு பயன்பாடு குறித்தும், பட்டாசு வெடிக்கும்போது எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தனா்.