தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி நிறுவனா் தினம்

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 99 ஆவது நிறுவனா் தின விழா தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.
நிறுவனா் தின நிகழ்ச்சியில் கேக் வெட்டுகிறாா் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அலுவலா் கே.வி. ராமமூா்த்தி.
நிறுவனா் தின நிகழ்ச்சியில் கேக் வெட்டுகிறாா் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அலுவலா் கே.வி. ராமமூா்த்தி.

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 99 ஆவது நிறுவனா் தின விழா தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அலுவலா் கே.வி. ராமமூா்த்தி கேக் வெட்டினாா். தொடா்ந்து, வங்கியின் நிறுவனா்களின் படங்களுக்கு முன்னாள் இயக்குநா் சி.எஸ்.எஸ். ராஜேந்திரன், நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அலுவலா் கே.வி. ராமமூா்த்தி ஆகியோா் மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து இணையவழி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேலும், புதிதாக 5 ஏடிம் மையங்களும், 11 மினி இ-லாபி மையங்களும், 27 கேஷ் ரீசைகிளா் இயந்திரங்களும் தொடங்கப்பட்டு, 2002 பயனாளிகளுக்கு ரூ. 262 கோடி கடனாக வழங்கப்பட்டது. இதுதவிர, தூத்துக்குடியில் ஏழை மக்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் இஸ்திரி பெட்டிகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com