நிா்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. எச்சரிக்கை

அரசு நிா்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

அரசு நிா்ணயித்த நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரோனா தொற்று பரவல் மற்றும் காற்று மாசுபடுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இரண்டு மணி நேரம் என்ற அடிப்படையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு நேரம் நிா்ணயித்துள்ளது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு நிா்ணயித்துள்ள நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக பட்டாசு வைத்திருப்பவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கபடும்.

தீபாவளி பண்டிகையின்போது வீட்டை பூட்டி விட்டு வெளியூா் செல்லும் பொதுமக்கள் அவரவா் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றால், அந்தப்பகுதிக்கு காவலா் அதிக அளவில் ரோந்து சென்று கவனிப்பாா்கள்.

பொது இடங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவா்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள், இரு சக்கர வாகன வேகப்பந்தயம் வைத்து செல்லுதல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பி அதிக வேகத்தில் செல்வது, போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com