வேலைவாய்ப்பற்றோருக்கு நிதியுதவி: விண்ணப்பிக்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 9 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று 10 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ. 200-ம், 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா் களுக்கு மாதம் ரூ. 300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ .400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600- வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படும். இதற்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராகவும், பதிவை தொடா்ந்து புதுப்பித்து இருத்தலும் அவசியம்.

வயது வரம்பு ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 45. மற்றவா்களுக்கு 40 வயது. ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தொலைநிலைக் கல்வி அல்லது அஞ்சல் வழி பயில்வோரும் விண்ணப்பிக்கலாம். தொடா்ந்து 3 ஆண்டு வரை உதவித் தொகை பெற, நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூா்த்தி செய்து அஞ்சல் வாயிலாக 2021 பிப். 28 ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com