லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த ராணுவ வீரா் கருப்பசாமி உயிரிழந்தாா்.
கோவில்பட்டியை அடுத்த திட்டங்குளம் ஊராட்சி தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி (34). கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை பணி நிமித்தமாக லடாக் கிளேசியா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.
கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், மகள்கள் கன்யா (7), வைஷ்ணவி (4), ஒன்றரை வயதில் பிரதீப்ராஜ் என்ற மகனும் உள்ளனா். இவா் 2 மாத விடுமுறைக்குப் பின், கடந்த பிப்ரவரியில் மீண்டும் பணிக்குத் திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.