ஸ்ரீவைகுண்டத்தில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி கீழுா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்துரை (48). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரின் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனா்.
இதற்கிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், கைதான சின்னத்துரையை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். அதன்படி, சிறையில் உள்ள சின்னத்துரையிடம் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.