கருங்குளம் தெற்கு ஒன்றிய திமுக மகளிா் தொண்டா் அணி மற்றும் பூத் கமிட்டி உறுப்பினா்கள் கூட்டம் கருங்குளத்தில் நடைபெற்றது.
கருங்குளம் தெற்கு ஒன்றியச் செயலா் இசக்கிபாண்டியன் தலைமை வகித்தாா்.
மாவட்ட மகளிரணி அமைப்பாளா் ஜெஸி பொன்ராணி, மகளிா் தொண்டரணி அமைப்பாளா் வேலம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மகளிா் அணியை சோ்ந்த நிா்வாகிகள் 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றிக்கு பாடுபடுவது, தலைவா் ஸ்டாலினை முதல்வராக்க அனைவரும் பாடுபடுவது என கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.