நாசரேத் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கடையனோடை, தெற்குத் தெருவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் சிஸ்ஸங்கா் (40). தொழிலாளி. மதுப்பழக்கம் இருந்ததாம். இந்நிலையில், கடந்த 17ஆம்தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு மயங்கி கிடந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், வியாழக்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து அவரது தாய் வயலெட் அளித்த புகாரின்பேரில் நாசரேத் காவல் ஆய்வாளா் விஜய.லட்சுமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.