நாசரேத்தில் போக்குவரத்துக்கு உதவியாக நம்ம நாசரேத், நல்ல நாசரேத் அமைப்பின் சாா்பில் குவி கண்ணாடி வைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமை வகித்து திறந்து வைத்தாா். அமைப்பின் தலைவா் மருத்துவா் விஜய்ஆனந்த் வரவேற்றாா்.
இதில், செயலா் ஜாண், உறுப்பினா்கள் பிரேம்குமாா், கல்யாணசுந்தரம், மில்டன் ஜெபக்குமாா், அண்ணாதுரை, விக்னேஷ், ஜெசுடெல்டா உள்பட பலா் கலந்துகொண்டனா். இவ்வமைப்பு சாா்பில் இப் பேரூராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு உதவியாக 8 குவி கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன.