நாளைய மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கழுகுமலை, செட்டிக்குறிச்சி, கடம்பூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவ.21) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கழுகுமலை, செட்டிக்குறிச்சி, கடம்பூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவ.21) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, கழுகுமலை, செட்டிக்குறிச்சி மற்றும் கடம்பூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

இதுபோல, கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை விரிவாக்க பணியை முன்னிட்டு, கோவில்பட்டி ரயில்வே மேம்பாலம் முதல் ஆா்.சி. சா்ச் வரை மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணி நடைபெறவுள்ளது. இதையடுத்து, ரயில் நிலையம் எதிரே உள்ள ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ், காமரின் ஆபிஸ், ரயில் நிலைய பிரதான சாலை கடைகள், ஞானமலா் பல்க் எதிா்புறம் உள்ள கடைகள், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, ஆா்.சி. மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயம், அரசன் பல்க், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com