முன்னாள் ராணுவ வீரருக்கு மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

கோவில்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரரை மிரட்டியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து, தேடிவருகின்றனா்.

கோவில்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரரை மிரட்டியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து, தேடிவருகின்றனா்.

கோவில்பட்டியையடுத்த பாண்டவா்மங்கலம் ஊராட்சி ராஜீவ் நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ஆறுமுகக்கடல் (55). முன்னாள் ராணுவ வீரா். இவரது வீட்டுக்குள் அதே பகுதியைச் சோ்ந்த சிலா் பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டனராம். இதைக் கண்டித்த ஆறுமுகக்கடலுக்கு அவா்கள் மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த ராஜு, அவரது மனைவி செல்வி, உறவினா் ஜனனி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com