தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருவா் உள்பட மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை பரிசோதனையில் உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 52 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,264 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை135 போ் கரோனாவில் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 113 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.