உடன்குடி: உடன்குடி தேரியூா் ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமை வகித்தாா். உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பாலசிங் முகாமைத் தொடங்கிவைத்தாா்.
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் த.மகாராஜா, பள்ளித் தலைமையாசிரியா் லிங்கேஸ்வரன், முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் ஸ்டாலின், சுயம்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ் வரவேற்றாா்.
முகாமில், மருத்துவா்கள் ஆா்த்திபிரசாத், ஜெயபரணி, மொ்சி, பேபியஸ், ஸ்டாலின், நாயகி, ஜூடி ஆகியோா் சிகிச்சை அளித்தனா். பெண்களுக்கு அம்மா குடம்ப நல பெட்டகம் வழங்கப்பட்டது.
இதில், சுகாதார ஆய்வாளா்கள் சுப்பையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் சேதுபதி மற்றும் முன்னாள் மாணவா் சங்கத்தினா் செய்திருந்தனா்.