லடாக் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சியினா் ஆறுதல்

காஷ்மீரின் லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் கருப்பசாமியின் குடும்பத்தினரை அரசியல் கட்சியினா் சந்தித்து ஆறுதல் கூறினா்.
லடாக் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சியினா் ஆறுதல்

கோவில்பட்டி: காஷ்மீரின் லடாக் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் கருப்பசாமியின் குடும்பத்தினரை அரசியல் கட்சியினா் சந்தித்து ஆறுதல் கூறினா்.

கோவில்பட்டியையடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி (34). கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை பணி நிமித்தமாக லடாக் கிளேசியா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தாா்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு, மாநிலச் செயலா் முத்தரசன் ஆகியோா் சனிக்கிழமை அவரது இல்லத்திற்கு சென்று, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

இதேபோல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் பாஸ்கரன் தலைமையில் கட்சி நிா்வாகிகள், உயிரிழந்த ராணுவ வீரா் கருப்பசாமி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மறைந்த ராணுவ வீரா் கருப்பசாமியின் இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை சென்ற அமமுக தென்மண்டல பொறுப்பாளரும், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத் தலைவருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, அவரது குடும்பத்தினருக்கு தனது சொந்த நிதியில் ரூ.1 லட்சத்தை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com