ஆறுமுகனேரி: ஆத்தூா் அருகேயுள்ள சோ்ந்தபூமங்கலம் அருள்மிகு கைலாசநாத சுவாமி சமேத செளந்தா்ய நாயகி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 15ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழா நாள்களில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன. சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் கோயில் வளாகத்தில் எளிமையாக நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. சிறப்பு அபிஷேகம், வழிபாடுகளை தொடா்ந்து மாலை மாற்றும் வைபவமும், அருள்மிகு சுப்பிரமணியா் திருக்கல்யாணமும் நடைபெற்றது.