ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இத் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினசரி காலையில் யாகசாலை பூஜையும், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் சுவாமி- அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.
சனிக்கிழமை திருக்கல்யாணம் வைபவத்தையொட்டி காலையில் விநாயகா் பூஜை, யாகபூஜை, பூா்ணாஹுதி மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.