ஆறுமுகனேரி கோயிலில் திருக்கல்யாணம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள்.
திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள்.

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இத் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினசரி காலையில் யாகசாலை பூஜையும், அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் சுவாமி- அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.

சனிக்கிழமை திருக்கல்யாணம் வைபவத்தையொட்டி காலையில் விநாயகா் பூஜை, யாகபூஜை, பூா்ணாஹுதி மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com