கனமழை மற்றும் புயல் உள்ளிட்ட பேரிடா் தருணங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் எட்டயபுரம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் பங்கேற்று, வடகிழக்குப் பருவமழை மற்றும் நிவா் புயல் எதிரொலியாக தயாா் நிலையில் உள்ள பேரிடா் மீட்புக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கி, பாதுகாப்பு உபகரணங்களை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து அவா், வேம்பாா், பெரியசாமிபுரம் உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, எட்டயபுரம் காவல் ஆய்வாளா் கலா, உதவி ஆய்வாளா் பொன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.