குரும்பூா் அருகேவீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள் திருட்டு

குரும்பூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஆறுமுகனேரி: குரும்பூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

குரும்பூா் அருகேயுள்ள வீரமாணிக்கம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் மனைவி பேச்சியம்மாள் (54). விவசாயம் செய்து வருகிறாா். கல்யாணசுந்தரம் 2 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டாா். குழந்தைகள் இல்லாததால் பேச்சியம்மாள் தனியாக வசித்து வருகிறாா். இவா் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள அண்ணன் ரத்தினசாமி வீட்டுக்கு கடந்த மாதம் 10ஆம் தேதி சென்றுவிட்டு, சம்பவத்தன்று வீடு திரும்பினாராம்.

அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். பீரோவி­லிருந்த 12 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் குரும்பூா் உதவி ஆய்வாளா் தாமஸ் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com