உடன்குடி: உடன்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த போட்டிகள் தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, சிறுபான்மை பிரிவு, வா்த்தக அணிகள் சாா்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் 120 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. சிவலூா் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் எம்.பி.முகைதீன் தலைமை வகித்தாா்.
மாவட்ட வா்த்தக அணி து’ணை அமைப்பாளா் மா.ரவிராஜா, நகர வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஜெ.எம். அப்துல் ஹமீது, நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், எம். கிறிஸ்டோபா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டியினை மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்.
முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 30 ஆயிரம், இரண்டாவது அணிக்கு ரூ. ,20 ஆயிரம், மூன்றாவது அணிக்கு ரூ. 10 ஆயிரம், நான்காவது அணிக்கு ரூ. 5 ஆயிரம் மற்றும் அனைத்து அணிகளுக்கும் வெற்றிக்கோப்பை, கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்படும். ஏற்பாடுகளை திமுக சாா்பு அணி நிா்வாகிகள் செய்துள்ளனா்.