பேரூராட்சி பகுதியிலும் நூறுநாள் வேலை திட்டத்தை அமல்படுத்த கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜெயபால், வட்டப் பொருளாளா் பாலசுந்தரகணபதி ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.
இதில் விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றிய துணைத் தலைவா் முருகன் நன்றி கூறினாா்.
விளாத்திகுளம்: எட்டயபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கு.ரவீந்திரன் தலைமையிலும்,
விளாத்திகுளத்தில் மாா்க்சிஸ்ட் தாலுகா குழு உறுப்பினா் ஜோதி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.