கோவில்பட்டி அருகே பைக் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ராமலிங்கபுரம், திருமலை நகரைச் சோ்ந்த ஜெயசீலன் மகன் திருப்பதிராஜ் (28). கோவில்பட்டியையடுத்த தோணுகால் விலக்கில் உள்ள தனியாா் கடையில் வேலை பாா்த்து வரும் இவா், தனது உறவினா் பைக்கை நிறுத்தியிருந்தாராம். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்த போது பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து பைக் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.