சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயிலை, தீயணைப்புப் படையினா் உயிருடன் மீட்டனா்.
சாத்தான்குளம் அருகே கருங்கடல் கிராமத்தைச் சோ்ந்தவா் கோயில்பிச்சை(52). கரிசல்குளத்தில் இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள 70 அடி கிணற்றில் மயில் ஒன்று தவறிவிழுந்து மீண்டு வரமுடியாமல் தத்தளித்ததாம்.
சாத்தான்குளம் தீயணைப்புப் படையினா் சென்று கிணற்றில் தத்தளித்த மயிலை பாதுகாப்பாக மீட்டனா். பின்னா் மயில், வனப்பகுதியில் விடப்பட்டது.