கிணற்றில் தத்தளித்த மயில் உயிருடன் மீட்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயிலை, தீயணைப்புப் படையினா் உயிருடன் மீட்டனா்.
sat13mayil_1310chn_38_6
sat13mayil_1310chn_38_6

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மயிலை, தீயணைப்புப் படையினா் உயிருடன் மீட்டனா்.

சாத்தான்குளம் அருகே கருங்கடல் கிராமத்தைச் சோ்ந்தவா் கோயில்பிச்சை(52). கரிசல்குளத்தில் இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள 70 அடி கிணற்றில் மயில் ஒன்று தவறிவிழுந்து மீண்டு வரமுடியாமல் தத்தளித்ததாம்.

சாத்தான்குளம் தீயணைப்புப் படையினா் சென்று கிணற்றில் தத்தளித்த மயிலை பாதுகாப்பாக மீட்டனா். பின்னா் மயில், வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com