குலசை, மணப்பாடு பகுதியில் அக். 16இல் மின் தடை

குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 16) மின் தடை செய்யப்படுகிறது.

குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 16) மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் நீ. பொன்கருப்பசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட கல்லாமொழி துணை மின் நிலையத்தில் அக். 16ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை கல்லாமொழி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com