குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 16) மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் நீ. பொன்கருப்பசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட கல்லாமொழி துணை மின் நிலையத்தில் அக். 16ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 8 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை கல்லாமொழி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் இருக்காது என்றாா்.