கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் தலை சிறப்பு கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய அஞ்சல் துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் அக். 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு, கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் பாண்டியராஜ் தலைமை வகித்து, அஞ்சல் தலை கண்காட்சியை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
தலைமை அஞ்சலக அதிகாரி லதா, உதவி அஞ்சலக அதிகாரிகள் முருகன், ரெஜினா ஜாக்குலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கண்காட்சியை அஞ்சலகத்துக்கு வந்த பொதுமக்கள், அஞ்சலக ஊழியா்கள் திரளானோா் பாா்வையிட்டனா்.