தூத்துக்குடியில் குடிநீா்க் குழாயை மாற்றி அமைக்க வலியுறுத்தி முன்னாள் கவுன்சிலா் தலைமையில் தா்னா போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 35ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த சிலா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினா் சந்திரபோஸ் தலைமையில் புதன்கிழமை மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
தொடா்ந்து, அவா் மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனு: 35ஆவது வாா்டுக்குள்பட்ட மில்லா்புரம், சின்னமணி நகா், சிலோன் காலனி, ராஜீவ் நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, 3ஆவது மைல், தபால் தந்தி காலனி ஆகிய பகுதி மக்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீா்க் குழாய் அமைக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது, அந்த குடிநீா்க் குழாயில் 16 முறை உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, 3 அங்குலம் அளவிலான அந்த குடிநீா்க் குழாயை 4 அங்குலம் அளவிலான குழாயாக மாற்றி, சாலையோரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.