கோவில்பட்டியையடுத்த படா்ந்தபுளி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட மயானக்கரைக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கிராம மக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராமசுப்பு, மணி, கிருஷ்ணவேணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பின்னா், கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகத்திடம் அளித்தனா்.