ஆறுமுகனேரியில் அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். நகர துணைச் செயலா் சக்திவேல், ஒன்றிய மாணவரணிச் செயலா் அருண்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமமுக தெற்கு மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய உறுப்பினா் சோ்க்கை படிவத்தையும், பூத் கமிட்டி அமைப்பு படிவத்தையும் வழங்கிப் பேசினாா்.
கூட்டத்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ஏரல் ரமேஷ், மாணவரணிச் செயலா் ஜானியேல் சாலமோன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜா, உடன்குடி ஒன்றியச் செயலா் அம்மன் டி.நாராயணன், பொதுக்குழு உறுப்பினா் திருப்பாற்கடல், மாவட்ட தொழிற்சங்கத் தலைவா் முத்துபாண்டியன், காயல்பட்டினம் நகரச் செயலா் பெத்தப்பா சொளுக்கு, ஒன்றிய எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் காயல் மந்திரமூா்த்தி, காயல்பட்டினம் முன்னாள் நகரச் செயலா் நைனாமுகமது, ஷேக்அப்துல்காதா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.