சாத்தான்குளம் அருகே லாரியில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவா் பலி

சாத்தான்குளம் அருகே லாரியில் இருந்து தவறி கீழே விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகே லாரியில் இருந்து தவறி கீழே விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள படுக்கப்பத்து மறக்குடி தெருவை சோ்ந்த முருகன் மகன் சிவக்குமாா்(15). அங்குள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது தந்தை மற்றும் தாய் இசக்கிதாய் ஆகியோா் சென்னையில் வசித்து வருகின்றனா். இதனால் சிவக்குமாா், தாத்தா தங்கராஜ் பராமரிப்பில் இருந்து வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை சிவக்குமாா் பழனியப்பபுரத்தில் உள்ள கல்குவாரிக்கு லாரியில் சென்றாா். அப்போது லாரியின் மேல்பகுதியில் தாா்பாய் எடுக்க சென்ற சிவக்குமாா், தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பேய்க்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com