தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை

கோவில்பட்டியை அடுத்த காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டியை அடுத்த காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அமைச்சா் கடம்பூா் செ.ராஜுவை சந்தித்து அளித்த மனு: விஜயாபுரி துணை மின் நிலையத்தில் இருந்து சால்நாயக்கன்பட்டி, கரிசல்குளம், சிவந்திப்பட்டி, முடுக்கலாங்குளம், துறையூா், தீத்தாம்பட்டி, காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி, கொப்பம்பட்டி, இலந்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

தினமும் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், சிறுகுறு தொழில் செய்வோா் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே, கிராமங்களுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com